ஒரே நாளில் இரு விமான விபத்தில் சிக்கி மரணத்தை வென்ற அதிர்ஷ்ட தம்பதி
ஒரே நாளில் சில மைல்கள் இடைவெளியில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி விமான விபத்துகளில் சிக்கி, தம்பதி ஒன்று மரணத்தை வென்றுள்ளது.
இருவரது விமானமும் தரையில் மோதி விபத்து
இத்தாலியின் துரின் பகுதிக்கு 30 வயதான Stefano Pirilli மற்றும் அவரது வருங்கால மனைவி 22 வயது Antonietta Demasi ஆகியோர் தனித்தனி விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.
Credit: Salford Police
ஆனால் எதிர்பாராத கோளாறு காரணமாக இருவரது விமானமும் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் இரு விபத்தில் இருந்தும் அந்த இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, அதிர்ஷ்டவசமாக விமானிகள் உட்பட எவருக்கும் உயிர் அபாயம் ஏற்படவில்லை. ஆனால் டெமாசிக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது, விமானி ரோட்டோண்டோவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்றே தெரியவந்துள்ளது.
அனைத்தும் சில நிமிடங்களில்
இதனிடையே, Stefano Pirilli எந்த காயங்களும் இன்றி தப்பியுள்ளார். மேலும், இது டெமாசியின் முதல் விமான பயணம் எனவும், ஆனால் இப்படியான ஒரு சூழலில் அது முடியும் என எதிர்பார்க்கவில்லை என்றே Pirilli தெரிவித்துள்ளார்.
மேலும், மரணத்தை வென்றதில் தங்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், விமானிகள் இருவரும் காயம்பட்டுள்ளது வருத்தமளிப்பதாக Pirilli குறிப்பிட்டுள்ளார். இரவு நேரம் திடீரென்று மூடுபனி பரவத் தொடங்கியதும் வெப்பநிலை குறைந்தது, அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது என்றார் விபத்து குறித்து விளக்கமளித்த Pirilli.
மேலும், கடுமையான சூழலை எதிர்கொண்டிருந்தாலும், தமது காதலி மற்றும் விமானி தொடர்பில் கவலை கொண்ட Pirilli, அவசர உதவிகளுக்கு தகவல் அளித்துள்ளார். அத்துடன், மீட்கப்பட்டதும் உடனடியாக டெமாசி மற்றும் விமானியை அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு விரைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |