விமானம் விழுந்ததால் தரைமட்டமான புதுமண தம்பதியின் வீடு! கண்ணீருடன் இடிபாடுகளை பார்வையிட்ட அவர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
அமெரிக்காவில் வீட்டின் மீது சிறிய விமானம் விழுந்ததில் அந்த வீடு முழுவதும் தரமட்டமான நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர்களான புதுமணத்தம்பதிக்கு துன்பத்திலும் ஆறுதல் அளிக்கும் ஒரு மகிழ்ச்சியான விடயம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் San Diego-வில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இரட்டை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம், அங்கிருந்த வீடுகளின் மீது சில தினங்களுக்கு முன்னர் மோதியது.
இதில் விமானத்தில் இருந்த இருவர் உயிரிழந்தனர். அதில் இந்தியாவை சேர்ந்த சுகதா தாஸ் என மருத்துவரும் ஒருவர் ஆவார். விமானம் வீட்டில் மோதியதில் அங்கிருந்த வீடுகள் சேதமடைந்தது.
அதிலும் கோடி மற்றும் கோர்ட்னி கேம்பில் என்ற இளம் புதுமணதம்பதிக்கு சொந்தமான வீடு முழுவதும் விமான விபத்தில் தீப்பிடித்து எரிந்ததில் தரைமட்டமானது. இந்த வீட்டை மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் அவர்கள் வாங்கினார்கள். இதன் காரணமாக அவர்கள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
நல்லவேளையாக விபத்து நடக்கும் போது இருவரும் வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து வீடு தரைமட்டமான இடத்தை கனத்த மனதோடு காண கோடி, கோர்ட்னி வந்தனர்.
அந்த இடிபாடுகளை பார்த்து கொண்டே வந்த போது தம்பதியின் திருமண மோதிரம் அங்கு கிடந்ததை கண்டு மகிழ்ச்சியடைந்து அதை எடுத்தனர். கோடி கூறுகையில், நான் பணிக்கு செல்லும் போது என் திருமண மோதிரத்தை வீட்டில் பத்திரமாக வைத்து விட்டு செல்வேன்.
வீடு இப்படிஆகிட்டதே என நாங்கள் உடைந்துபோய்விட்டோம், ஆனால் எங்கள் மனதுக்கு நெருக்கமான மோதிரம் கிடைத்தது திருப்தியான உணர்வை கொடுக்கிறது.
எங்கள் வாழ்நாள் முழுவதும் வைத்து பாதுகாக்கும் பொருட்களில் இந்த மோதிரமும் ஒன்று.
இது எனக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கிறது என வேதனையிலும் சிறு புன்னகை சிந்தியபடி கூறியுள்ளார்.