பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்க புலியை வைத்து தம்பதி செய்த செயல்.. விமர்சனத்தை கிளப்பிய வீடியோ
துபாயில் தங்களுக்கு பிறக்க போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிய தம்பதி புலியை பயன்படுத்திய வீடியோ வைரலாகியுள்ள நிலையில் அது கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.
துபாயில் வசிக்கும் ஒரு ஜோடி, பிறக்கப்போகும் தங்கள் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துவதற்காக விருந்து ஒன்றை கொடுத்தனர்.
இதற்காக கடற்கரைப் பகுதியில் இரு வண்ணப் பொடிகள் அடங்கிய பலூன்களை அந்த தம்பதியினர் வானில் பறக்க விட்டனர். பின்னர் அந்த பலூனை பிடிக்கும் நிகழ்ச்சியில் நிஜ புலியே பயன்படுத்தப்பட்டது.
கடற்கரை மணல் பகுதியில் நடந்து சென்ற அந்த புலி வானில் பறந்த பலூன்களில் ஒன்றினை கவ்வி பிடித்த போது, அது வெடித்து பிங்க் நிற பொடி வெளியானது.
இதன் மூலம் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று அந்த தம்பதியினர் நம்புகின்றனர். தம்பதியின் இந்த செயல் வனவிலங்கு பிரியர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களை கோபப்படுத்தியுள்ளது.
இது குறித்து பலரும் விமர்சித்துள்ளனர். ஒரு நபரின் பதிவில், இது மிகவும் அபத்தமானது, வனவிலங்கை செல்லப்பிராணிகளாக பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.
மற்றொருவரின் பதிவில், புலியை வைத்து இப்படி செய்வதை பெருமையாக நினைக்கக்கூடாது, இது தவறாகும் என பதிவிட்டிருக்கிறார்.
இப்படி பலரும் பல்வேறு விதமாக விமர்சித்துள்ளனர்.