இரண்டு மகள்களையும் கொன்றுவிட்டு தம்பதி எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டம் திருச்சியில் கடன்பிரச்னையால் தம்பதி தங்கள் மகள்களை கொன்றுவிட்டு, தங்களது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூக்கில் தொங்கிய தம்பதி
திருச்சியின் மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (42). இவரது மனைவி விக்டோரியா மற்றும் மகள்கள் ஆராதனா, ஆலியா.
இவர்களின் வீடு காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் பதில் ஏதும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அலெக்ஸ், விக்டோரியா தம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.
இறந்து கிடந்த மகள்கள்
அவர்களது மகள்கள் இருவரும் வேறொரு அறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நால்வரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில், கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியாத தம்பதி இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும், தம்பதி தங்கள் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துள்ளனர் என்றும் தெரிய வந்தது. ஜவுளி வியாபாரம் செய்து வந்த அலெக்ஸ் தொழிலில் நட்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |