உணவகத்திற்கு மாஸ்க் அணிந்து சென்ற தம்பதிக்கு ஏற்பட்ட அவமானம்! அமெரிக்காவில் அரங்கேறிய வினோதமான சம்பவம்
அமெரிக்காவில் மாஸ்க் அணிந்து கொண்டு உணவகத்தில் சாப்பிட வந்த தம்பதியை வெளியே துரத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பயங்கர மோசமாக தாக்கி வருகின்றது. குறிப்பாக கொரோனா முதல் அலையில் சிக்கிய அமெரிக்கா மிகப்பெரிய பாதிப்பினை சந்திக்க நேரிட்டது.
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் நிகழ்ந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா பகுதியில் டெக்ஸாஸில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு தம்பதி மாஸ்க் அணிந்து கொண்டு சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது ஹோட்டல் நிர்வாகம் அவர்களை மாஸ்க் அணிந்து இருந்ததால் வெளியே போக சொல்லி மேலும் அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தனியார் நடத்தும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்றாற் போல் விதிகளை அமைத்துக்கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த உணவகத்தை விட்டு வெளியேறிய தம்பதி அவர்களின் அனுபவத்தை குறித்து முகநூலில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவர் இங்க மாஸ்க் அணிபவர்களுக்கு இடமில்லை. மாஸ்க்கை கழட்டிவிட்டு உள்ளே வாருங்கள் என்று கூறினர். எங்களுடைய 4 மாத குழந்தைக்கு உடலில் பிரச்னை உள்ளதால் நாங்கள் மாஸ்க் அணிந்துள்ளதாக கூறியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் அந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு இந்த விதிமுறைக் குறித்து எந்தவித எச்சரிக்கை பலகைகளையும் வைக்கவில்லை என்று முகநூலில் பகிர்ந்துள்ளார்.