பிரித்தானியா வரும் பயணிகளுக்கான முக்கிய கட்டுப்பாடு ரத்து! பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கான கொரோனா பரிசோதனைகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, பிரித்தானியா வணிகத்திற்காக மற்றும் பயணிகளுக்கு திறந்திருக்கும் என்பதை வெளியுலகத்திற்கு காட்ட, பயணக் கட்டுப்பாடுகளில் முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளது.
அதாவது, பிரித்தானியா வரும் மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கொரோனா பரிசோதனைகள் எடுக்க வேண்டியதில்லை என அவர் அறிவித்தார்.
ஆனால், இந்த மாற்றும் எப்போது அமுல்படுத்தப்படும் என்பது குறித்து அவர் கூறவில்லை, ஆனால் இது குறித்து மேலதிக விவரங்கள் திங்கட்கிழமை பிற்பகுதியில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரித்தானியாவில் மிகப்பெரிய விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.