தடுப்பூசி போடச்சென்ற நபரை பொலிசில் சிக்க வைத்த நர்ஸ்: சுவாரசிய காரணம்
இத்தாலியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் சன்றிதழ் மட்டும் பெற்றுக்கொள்ள விசித்திரமாக திட்டமிட்ட நபர் மீது பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
இத்தாலியில் 50 வயது கடந்த நபர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் சன்றிதழ் மட்டும் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக, தடுப்பூசி முன்பதிவு செய்துவிட்டு, போலியான silicone கையுடன் தடுப்பூசி மையம் சென்றுள்ளார்.
ஆனால், சுதாரித்துக் கொண்ட நர்ஸ் ஒருவர், குறித்த நபர் மீது பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். தடுப்பூசி போடுவதற்காக அவரது கையை பரிசோதித்தபோதே, அது போலியென கண்டறிந்ததாக அந்த நர்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதியே, தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் மரணமடைந்துள்ளதுடன், பொருளாதாரத்திலும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இதனிடையே, தடுப்பூசி போடாமல் ஏமாற்ற முயன்ற நபரும் சுகாதார ஊழியர் எனவும், தடுப்பூசி போடாததாலையே அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார் எனவும் தெரிய வந்துள்ளது.