கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இந்த வைரஸால் ஆபத்தா? ஆய்வில் வெளியான புதிய தகவல்
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களை Omicron வைரஸ் தாக்குமா என்பது குறித்து பிரபல விஞ்ஞானிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. கொரோனாவை தொடர்ந்து டெல்டா, Omicron என பல வகை வைரஸ் மக்களுக்கு எதிராக படையெடுத்து வருகின்றது.
கடந்த திங்கட்கிழமை வெளியான ஆய்வில், உலகளவில் தற்போது பயன்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசிகள் டெல்டா மற்றும் Omicron வகைகளால் ஏற்படும் கடுமையான நோய்க்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குவதாக ஒரு புதிய ஆராய்ச்சி கூறியுள்ளது.
இது பாதுகாப்பு நோயெதிர்ப்பு செல்களை உற்பத்தி செய்வதன் மூலம் பாதுகாப்பைத் தூண்டுகிறது. இது குறித்து Dan H Barouch நிபுணர் கூறுகையில் Omicron மாறுபாட்டின் காரணமாக தற்போதைய தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகின்றன.
இருப்பினும் நடுநிலைப்படுத்தும் நோயெதிர்ப்பு சக்தியின் தன்மைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளை பெற்ற 47 பாதிக்கப்படாத நபர்களின் மாதிரிகளை பயன்படுத்தி இஸ்ரேலில் உள்ள Beth Israel Deaconess Medical Center (BIDMC) என்கின்ற குழு ஒரு ஆய்வை நடத்தியது.
அதில், தடுப்பூசிகளில் உள்ள செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி கடுமையான கொரோனா நோயிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.