பயங்கர பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: முதன்முறையாக ஒப்புக்கொண்ட நிறுவனம்
தங்கள் நிறுவனத் தயாரிப்பான கோவிட் தடுப்பூசியால் அபூர்வமாக பக்கள் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உண்மைதான் என முதன்முறையாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
கோவிட் தடுப்பூசிகள்
2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று பரவத்துவங்கிய நிலையில், அதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பல தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கின.
அவ்வகையில், பிரித்தானிய ஸ்வீடன் நிறுவனமான ஆஸ்ட்ராசெனகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலையும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கின. அதன் பெயர் கோவிஷீல்டு (Covishield) சில நாடுகளில் அது Vaxzevria என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.
CREDIT: Andrew Fox
விடயம் என்னவென்றால், இந்த ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட சிலர், மூளையில் இரத்தக்கட்டிகளால் பாதிக்கப்பட்டனர். சிலருக்கு அத்துடன் இரத்தத்தில் இரத்தத்தட்டுகளின் அளவு குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, 40 வயதுக்குக் கீழுள்ள இளம்பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பலர் ஆஸ்ட்ராசெனகாவால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து குற்றச்சாட்டுகள் தெரிவித்தும், பின்னர் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையிலும், ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தங்கள் பக்க பிரச்சினையை ஒப்புக்கொள்ளவேயில்லை.
CREDIT: John Lawrence
முதன்முறையாக ஒப்புக்கொண்ட நிறுவனம்
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட ஜேமி ஸ்காட் (Jamie Scott) என்பவருக்கு இரத்தக்கட்டி உருவானதுடன், மூளையில் இரத்தக்கசிவும் ஏற்பட, அவருக்கு நிரந்தர மூளை பாதிப்பு ஏற்பட்டது.
மூன்று முறை ஸ்காட்டின் மனைவியை அழைத்த மருத்துவமனை, அவர் இறந்துபோவார் என அவரிடம் கூறியுள்ளது.
CREDIT: PAUL ELLIS/AFP
ஸ்காட், ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், முதன்முறையாக தங்கள் நிறுவனத் தயாரிப்பான கோவிட் தடுப்பூசி, அபூர்வமாக, இரத்தக்கட்டி மற்றும் இரத்தத்தட்டுகள் குறைதல் என்னும் TTS அதாவது Thrombosis with Thrombocytopenia Syndrome என்னும் பக்க விளைவை ஏற்படுத்தக்கூடும் என தனது தரப்பு ஆவணங்களில் ஒப்புக்கொண்டுள்ளது.
விடயம் என்னவென்றால், அந்த ஒரு வாக்கியம் அந்நிறுவனத்துக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதாவது, ஏற்கனவே பலர் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதுடன், இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து மேலும் பலர் அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர வாய்ப்புள்ளது என்பதால், ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் பெரும் தொகையை இழப்பீடாக செலுத்தும் நிலை உருவாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |