ராணி முன்னரே இறந்துவிட்டார்! தொழில்நுட்பம் மூலம் பொதுவெளியில் காட்டப்பட்டார் என வினோத தகவலை கூறும் ஒரு தரப்பு
மகாராணி சில மாதங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார் என கூறும் சதிதிட்ட கோட்பாடுகளை நம்புகிற ஒரு தரப்பு.
ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் இருப்பது போல காட்டப்பட்டதாகவும் கூறிய வினோத தகவல்.
பிரித்தானிய மகாராணி சில மாதங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார் எனவும், ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் இருப்பது போல பொதுவெளியில் காட்டப்பட்டுள்ளார் எனவும் சதிதிட்ட கோட்பாடுகளை நம்புகிற ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி மரணமடைந்தார். அவரின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் சதிதிட்ட கோட்பாடுகளை நம்புகிற ஒரு தரப்பினர் மகாராணி சில மாதங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார் எனவும், ஹாலோகிராம் தொழிநுட்பத்தை பயன்படுத்தி அவர் இருப்பது போல காட்டப்பட்டதாகவும் வினோத கருத்தை வெளியிட்டுள்ளனர்.
Getty Images
ராணியார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸை சந்தித்தார். ஸ்காட்லாந்தில் உள்ள Balmoral Castleல் தான் இந்த சந்திப்பு நடந்தது, இது தொடர்பான புகைப்படமும் வெளியானது.
ஆனால் சிலரின் கூற்றுப்படி, ட்ரஸ் ராணியின் ஹாலோகிராமுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்தார் என கூறுகின்றனர். எவ்வாரயினும், இது போன்ற ஆதாரமில்லாத மற்றும் நம்பும்படியில்லாத பேச்சுக்களை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அதை கடந்து போகவேண்டியது தான் உள்ளது.
AFP via Getty Images