ஆண்களே பெண்கள் போன்று நடித்து பல மில்லியன் ஏமாற்றிய சம்பவம்: எச்சரிக்கை செய்தி
சீனாவில் ஆண்களே பெண்கள் போன்று போலி மார்பகங்களை வைத்துக் கொண்டு, இணையத்தில் ஆண்கள் பலரை ஏமாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
சீனாவில் கிழக்கு Zhejiang மாகாணத்தில் இருக்கும் காவல்துறை வெளியிட்ட வீடியோவை, தற்போது அந்நாட்டு அனைத்து காவல்துறையும் தங்களுடைய இணையதள பக்கத்தில், பதிவிட்டு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தற்போது கொரோனா பரவல் காரணமாக சீனாவில் இன்னும் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த போது, பொலிசாருக்கு 2020-ஆம் ஆண்டின் அந்த ஆறு மாதங்களுக்குள் நிர்வாண அரட்டைகள் தொடர்பாக 9000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.
இதனால் பொலிசார் இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தனிமையில் இருக்கும் ஆண்கள், இணையத்தில் மூழ்கி வருவதால், அவர்களை ஈர்க்கும் வகையில், வெய்போ ஆப்பில் நிர்வாண அரட்டை என்று, பெண்கள் பணத்திற்காக மிகவும் ஆபசமாக நடந்து கொள்வர். அதற்கு ஏற்ற வகையில், அவர்களுக்கு பணம் போய் சேரும்.
அந்த வகையில் ஆண்களே குறித்த நிர்வாண வீடியோ அரட்டையில், ஒரு பெண் போன்ற முகமூடி அணிந்து கொண்டு, புரோஸ்டெடிக் மார்பகங்களை(போலி மார்பகங்களை) அணிந்து ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனால் பொலிசார் உடனடியாக, அதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பெண் போன்று இருக்கும் ஆண், அப்படியே பெண் போன்று நடிக்கிறார். அவர் அணிந்திருக்கும் உடைக்கும் கீழே மார்பகங்கள் விலகுவதை பார்க்க முடிகிறது.
இதன் காரணமாக்வே, சிறுவர்களே, நிர்வாணமாக அரட்டை அடிக்க வேண்டாம். இப்போது வித்தியாசமாக மோசடி நடக்கப்படுகிறது. இது உங்களின் தனிப்பட்ட தகவல்களை கூட திருட முடியும் என்று எச்சரித்துள்ளனர்.
மேலும், பொலிசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில், தற்போது வரை 10 தனித்தனி பிளாக் மெயில் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இப்படி இணையதளம் மூலம் இந்த கும்பல்கள் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமாக பணத்தை மிரட்டி வாங்கியிருக்கலாம் என்று நம்ப்படுகிறது. இன்னும் பலர் இவர்களிடம் ஏமாந்திருக்கலாம், ஆனால் அவர்கள் வெளியில் தெரிந்தால் வெட்கம், மானம் போய்விடும் என்று இருப்பதாக பொலிசார் நம்புகின்றனர்.