சக மாணவியை சீரழித்த 17 வயது சிறுவன்! நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம்
அர்ஜென்டினாவில் தனது டீனேஜ் வகுப்பு தோழியை சீரழித்து, சித்திரவதை செய்து கொலை செய்த 17 வயது பள்ளி மாணவனை கைது செய்துள்ளனர்.
அர்ஜென்டினாவில் Santiago del Estero மாகாணத்தில் உள்ள வில்லா அட்டாமிஸ்கி கிராமத்தில், லூசியானா செக்வீரா எனும் 17 வயது சிறுமி, ஜூன் 17 அன்று சில புகைப்பட நகல்களை எடுப்பதற்காக வீட்டிலிருந்து தனது பள்ளிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அதே நாளில் இரவு, மணிக்கணக்கில் வாடகைக்கு எடுக்கக்கூடிய ரகசியமாக இயக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஹோட்டல் அறையில் லூசியானா இரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இரவு 9 மணியளவில் மரணமடைந்தார்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார், அதனைத் தொடர்ந்து ஹைபோவோலமிக் அதிர்ச்சியால் இதயம் செயலிழப்பு காரணமாக இறந்தார் என்று தெரியவந்தது. மேலும் அவர் கோவிட்-19 தோற்றால் பாதிக்கப்பட்டிருந்ததும் உறுதியானது.
லூசியானாவின் கால் மற்றும் முதுகில் தீக்காயங்கள் இருந்தன, அவை ஒருவேளை சிகரெட் அல்லது லைட்டரால் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
லூசியானாவை இந்த நிலையில் முதலில் பார்த்த ஹோட்டல் அறை பணியாளர்கள், ஒரு டீனேஜ் ஆண் ஒரு மணி நேரத்திற்கு முன்பே அறைக்கு பணம் செலுத்தியதாகவும் பின்னர் அந்த சிறுமியை தனியாக விட்டு சென்றுள்ளதாகவும் கூறினர்.
சந்தேகநபர், 17 வயது மைனர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர் லூசியானாவின் வகுப்புத் தோழர் என்று கூறப்படுகிறது. அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பொலிஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம், வெறும் 7,809 மக்கள்தொகை கொண்ட வில்லா அட்டமிஸ்கி கிராமத்தை உலுக்கியுள்ளது. அப்பகுதியில் லூசியானாவின் கொடூரமான மரணத்திற்கு நீதி கோரி ஒரு பாரிய ஆதரவு கிளம்பியுள்ளது.
லூசியானாவின் பெற்றோர்கள் மற்றும் ஒரு சகோதரி மிகப்பெரிய துக்கத்தை சந்தித்துள்ளனர். கதறி அழுத்த அவரது அப்பா, லூசியானா பயங்கரமான படிப்பாளி, கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் என்று கூறினார். மேலும், அவர் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருக்க விரும்பியதாகவும் கூறினார்.
17 வயது மாணவி லூசியானாவின் கொடூர மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது.