இதுவரை 20 மில்லியன் டன் உணவு தானியம்!கருங்கடல் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது: ஐ.நா
உக்ரைனில் இருந்து விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவும் கருங்கடல் தானிய முன்முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தானிய ஏற்றுமதி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு, உலக அளவில் ஏற்பட்ட தானிய பற்றாக்குறை தீர்ப்பதற்காக உக்ரைன், ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து கருங்கடல் உணவு தானிய ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
அதனடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 23 மில்லியன் டன் உணவு தானியங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தம் மார்ச் 18ம் திகதியோடு காலாவதியாகும் நிலையில், அது நீட்டிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
தானிய ஏற்றுமதி முக்கியத்துவம் வாய்ந்தது
சமீபத்தில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்காக உக்ரைன் தலைநகர் கியேவ்-விற்கு வந்த அன்டோனியோ குட்டெரெஸ் உக்ரைனில் இருந்து விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவும் கருங்கடல் தானிய முன்முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.
இந்த உணவு தானிய ஒப்பந்தம் உலகளாவிய உணவு விலையை குறைப்பதில் பங்களித்தது மற்றும் போருக்கு அதிக விலையை செலுத்தும் மக்களுக்கு அவசர கால நிவாரணம் வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.