UAE-யின் தற்போதைய நிலை குறித்து பட்டத்து இளவரசர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரத்தில் தற்போதைய கொரோனா நிலை குறித்து அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான WAM வெளியிட்ட வீடியோவில், ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளது, வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் கூறினார்.
நாம் நெருக்கடியிலிருந்து மீண்டு, அதிலிருந்து பல பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியதற்கு நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம் என இளவரசர் வீடியோவில் கூறினார்.
#MohamedbinZayed: We overcame the #COVID19 crisis and learnt many lessons from the experience. As life in the #UAE begins to return to normal, we thank God #WamNews pic.twitter.com/eQm1sRrGWR
— WAM English (@WAMNEWS_ENG) October 6, 2021
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய கொரோனா தொற்றுகள் ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருகின்றன.
செவ்வாயன்று, கடந்த 24 மணி நேரத்தில் 176 புதிய தொற்றுகள் பதிவானதாக நாட்டின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்தது, இது ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவான மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.
செப்டம்பர் 22 அன்று குறிப்பிட்ட பகுதிகளுக்கு கட்டாய முகக்கவச விதிகள் தளர்த்தப்பட்டன, மேலும் தடுப்பூசி விகிதங்களின் அடிப்படையில் பள்ளிகளில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான புதிய விதிகளை அபுதாபி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.