ஈரான் போரில் அமெரிக்கா இழந்த விமானங்களின் எண்ணிக்கை: CRS வெளியிட்ட அறிக்கை
ஈரானுடனான மோதலில் அமெரிக்கா குறைந்தது 42 போர் விமானங்களை இழந்து இருப்பதாக CRS அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட சேதம்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கையில் குறைந்தது 42 அமெரிக்க இராணுவ விமானங்கள் சேதமடைந்தோ அல்லது அழிக்கப்பட்டோ இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை(CRS) அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போர் நடவடிக்கையில் இராணுவ தரவுகளின் வகைப்பாடு மற்றும் சேதங்களுக்கான காரணத்தை கண்டறிவதில் உள்ள சிக்கல் ஆகியவை இந்த இழப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க செய்யும் என்று CSR அறிக்கை எச்சரித்துள்ளது.

ஈரான் போர் காரணமாக நிதிச்சுமை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஆபரேஷன் எபிக் பியூரி நடவடிக்கைகளுக்காக கிட்டத்தட்ட 29 பில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டு இருப்பதாக மே 12ம் திகதி நடந்த விசாரணையின் போது பென்டகன் நிதித் துறை தலைவர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் III தகவல் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட விமானங்களின் விவரம்
சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட விமானங்கள் குறித்து சென்ட்காம் வெளியிட்ட அறிக்கையின் படி, சண்டை விமானங்களான நான்கு F-15E Strike Eagle போர் விமானம், ஒரு F-35A Lightning II போர் விமானம் aircraft, one A-10 Thunderbolt II தரை தாக்குதல் விமானம் ஆகியவை சேதமடைந்துள்ளன.
அதேபோல், ஏழு KC-135 Stratotanker aerial refuelling aircraft, ஒரு E-3 Sentry விமானம், இரண்டு MC-130J கமாண்டோ II விமானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
அத்துடன் 1 HH-60W ஜாலி கிரீன் II ஹெலிகாப்டர்கள், 24 MQ-9 மற்றும் 1 MQ-4C ட்ரோன்கள் ஆகியவை இந்த சேத மதிப்பீட்டின் கீழ் வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |