தொற்றுநோய் பரவும் சொகுசுக் கப்பல்... ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்
ஹன்டா வைரஸ் பரவல் உள்ள ஒரு சொகுசுக் கப்பல் கேனரி தீவுகளுக்குப் பயணிக்கவுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம்
கப்பலின் பிரித்தானிய மருத்துவர் உட்பட இரண்டு பணியாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், அவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவமனை விமானம் மூலம் கேனரி தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

மட்டுமின்றி, மரணமடைந்த ஒரு ஜேர்மானியருடன் தொடர்புடைய மூன்றாவதொரு நபரும் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார்.
இந்த நிலையில், கப்பல் நங்கூரமிட்டிருக்கும் கேப் வெர்டேயிலிருந்து, எந்தெந்தப் பயணிகளுக்கு அவசர வெளியேற்றம் தேவை என்பதை அதிகாரிகள் தீர்மானித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்டு, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகப் பயணித்த MV Hondius கப்பலில் இருந்த மூன்று பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணமடைந்தனர்.
இந்த நிலையில், 23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 149 பேர், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் கப்பலிலேயே தங்கியிருப்பதாக, அக்கப்பலை இயக்கும் Oceanwide Expeditions நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பிரித்தானிய ஊழியர்களைத் தவிர, கப்பலில் மேலும் 22 பிரித்தானியர்கள் உள்ளனர். எஞ்சியுள்ள பயணிகள் கேனரி தீவுகளுக்குச் செல்வார்கள் என்றும், அங்கு அவர்கள் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் சென்றடைவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வ கடமை
இதனிடையே, கேப் வெர்டேவில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலாது என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கியிருந்தது. மட்டுமின்றி, வெளியான அறிக்கை ஒன்றில், தேவையான வசதிகளைக் கொண்ட மிக அருகாமையிலுள்ள இடம் கேனரி தீவுகள் ஆகும்.
இவர்களில் பல ஸ்பானிய குடிமக்களும் அடங்குவர்; இவர்களுக்கு உதவுவது ஸ்பெயினின் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேனரி தீவுகளுக்கு வந்தடைந்த பிறகு, குழுவினரும் பயணிகளும் பரிசோதிக்கப்பட்டு, தேவையான கவனிப்பு அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குவார்கள் என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹன்டா வைரஸ் பொதுவாக கொறித்துண்ணிகள் மூலம் பரவுகிறது, ஆனால் கப்பலில் இருந்த மிகவும் நெருங்கிய தொடர்புகளுக்கு இடையே இது பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |