பிசிசிஐ நடவடிக்கையால் வீணாய் போன தோனியின் திட்டம் - கடுப்பான ரசிகர்கள்
ஐபிஎல் தொடருக்காக தோனி போட்ட திட்டம் ஒன்று பிசிசிஐ நடவடிக்கையால் வீணாய் போனதாக் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
கொரோனா காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மும்பை, புனே நகரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அணிகளும் வரும் மார்ச் 8 ஆம் தேதிக்குள் மும்பையில் ஆஜராக வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
அங்குள்ள தனியார் ஹோட்டலில் அனைவரும் பயோ பபுளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அயல்நாட்டு வீரர்களுக்கு 5 நாட்களும், இந்திய வீரர்களுக்கு 3 நாட்களும் தனிமைப்படுத்துதல் உண்டு என்றும், இந்த காலக்கட்டத்தில் எடுக்கப்படும் 3 கொரோனா பரிசோதனையிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே வரும் மார்ச் 14 ஆம் தேதி முதல் அணிகள் பயிற்சியை தொடங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சென்னை அணிக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வழக்கம்போல முதலில் பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ள தோனி தலைமையிலான சென்னை அணி இம்முறை சூரத்தில் முகாமிட்டுள்ளது. ஆனால் தற்போது மும்பை வருமாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.