பிளே ஆப் போட்டியில் சென்னை இவரை எடுக்க கூடாது! கவுதம் காம்ப்பீர் கொடுக்கும் ஐடியா
டெல்லி அணிக்கெதிரான பிளே ஆப் போட்டியில், சென்னை அணி சுரெஷ் ரெய்னாவை எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய பிளே ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அதுவே தோல்வி பெறும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில், இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ராபின் உத்தப்பாவிற்கு போதிய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.
கடந்த இரண்டு போட்டிகளிலும் ராபின் உத்தப்பா சரியாக விளையாடவில்லை என்றாலும், நிச்சயமாக அவர் பழைய பார்மிற்கு திரும்புவார் என நம்புகிறேன்.
எனவே பிளே ஆப் சுற்றுப் போட்டியில் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக ராபின் உத்தாப்பாவிற்கே சென்னை அணி ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.