ப்ளே ஆப்பில் டெல்லியை வீழ்த்த CSK அணி ஆயத்தம்! தமிழக வீரரை உள்ளே கொண்டு வர டோனி பலே திட்டம்! உத்தேச அணி பட்டியல்
ஐபிஎல்லில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் இடையே பிளே ஆப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் சென்னை அணியில் தமிழக வீரர் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடைபெறவுள்ள முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுவிடும். தோல்வியடையும் அணி, அடுத்து எலிமினேசன் போட்டியில் ஆர்சிபி, கொல்கத்தா அணிகளில் வெற்றிபெறும் அணியுடன் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றில் மோதும்.
இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதனால், இன்றைய போட்டியில் டெல்லி, சிஎஸ்கே இரண்டு அணிகளுக்கும் வெற்றி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணி கடந்த மூன்று போட்டிகளிலும் தோற்று, பின்னடைவில் இருக்கிறது. சிஎஸ்கேவைப் பொறுத்தவரை அந்த அணியில் பலம் என்றால் ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸிதான். இவரும் அணிக்கு சிறப்பான துவக்கம் தருகிறார்கள்.
அடுத்து மிடில் வரிசை மிகவும் சுமாராகத்தான் இருக்கிறது. மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி போன்றவர்கள் தொடர்ந்து ரன்களை குவிக்க திணறி வருகிறார்கள்.
இதனால், கடந்த சில போட்டிகளில் ரெய்னா களமிறக்கப்படவில்லை. காயம் என காரணம் சொல்லப்பட்டது. அவருக்குப் பதிலாக ராபின் உத்தப்பா களமிறக்கப்பட்டார்.
ஆனால், அவரோ இரண்டு போட்டிகளிலும் வெறும் 21 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் ரெய்னா, உத்தப்பா இரண்டு பேரையும் நீக்கவிட்டு தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பந்துவீச்சில்தான் ஜோஸ் ஹேசில்வுட் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால், இவருக்குப் பதிலாக ஜேசன் ஃபெகண்டோர்ஃபை எடுக்க சிஎஸ்கே முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்றைய போட்டிக்கான உத்தேச அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸி, மொயில் அலி, ராபின் உத்தப்பா / ஜெகதீசன், அம்பத்தி ராயுடு, டோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்தூல் தாகூர், தீபக் சஹார், ஜோஸ் ஹேசில்வுட் / ஜேசன் ஃபெகண்டோர்ஃப்.