கியூப அப்டலா தடுப்பூசிக்கு பச்சை கொடி காட்டிய பிரபல நாடு! வெளியான முக்கிய தகவல்
வியட்நாமில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கியூபா நாட்டை சேர்ந்த அப்டலா தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியட்நாம் நாட்டில் மொத்த மக்கள் தொகை 9.8 கோடி. அனால் இது வரை 6.3% பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு புதிதாக உருமாறிய டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.
இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 16,637 பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வியட்நாம் அதிபர் அதிபர் நிகுவென் சுவான் புச் கியூபாவுக்கு பயணம் மேற்கொள்ளுவதற்கு முன்பாக கியூபாவின் சொந்த தயாரிப்பான அப்டலா தடுப்பூசியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்திருந்தார்.
தென் கிழக்கு ஆசியப் பகுதியே வியட்நாம் நாடு தான் மிக குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு எதிராக செயல்படும் பைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக் V, சைனோவாக், சைனோஃபார்ம், கோவாக்சின், கோவிஷீல்டு என பலவகையான தடுப்பூசிகளை வியட்நாம் தங்களது மக்களுக்கு செலுத்தி வருகின்றது.
இதையடுத்து கியூப நாட்டை சேர்ந்த அப்டலா தடுப்பூசிக்கு வியட்நாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. கியூப நாட்டில் 2 வயது முதல் 10 வயதிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
உலகிலேயே 2 வயது குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி கியூபா சாதனை செய்திருக்கிறது.