பறக்கும் விமானத்தில் காலில் சிந்திய தேநீர்: பெருந்தொகை இழப்பீடாக பெற்ற இளைஞர்
டப்ளினிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற விமானத்தில் இளைஞர் ஒருவரின் காலில் தேநீர் சிந்திய சம்பவத்தில் இழப்பீடாக பெருந்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தை சேர்ந்த தற்போது 17 வயதாகும் அந்த இளைஞருக்கு துருக்கி விமான சேவை நிறுவனம் 56,000 பவுண்டுகள் இழப்பீடாக அளிக்க முன்வந்துள்ளது.
கடந்த 2017 ஜூலை மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில், 13 வயதான சிறுவன் Karakaya, தமது தாயாரின் உதவியுடன் நீதிமன்றத்தை நாடினான்.
சம்பவத்தின் போது சிறுவன் Karakaya கையில் இருந்த மிகவும் சூடான தேநீர் கிண்ணம், விமான ஊழியர் ஒருவரின் தவறால், சிறுவனின் தொடை மீது சிந்தியுள்ளது.
இச்சம்பவத்தால் சிறுவனின் வலது தொடையில் நிரந்தரமான வடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பு மருத்துவர்களை சந்தித்து தமது மகனின் நிலை குறித்து ஆலோசித்ததாக Karakaya-ன் தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று வார காலத்தில் உரிய சிகிச்சை மேற்கொண்டால் காயம் ஆறிவிடும் என மருத்துவர் உறுதி அளித்தாலும், அந்த வடு காலத்திற்கும் மறையாது என்றே தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இழப்பீடு கோர முடிவு செய்துள்ள Karakaya-ன் குடும்பம், தாயார் சார்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் முடிவை எட்டியுள்ள நீதிமன்றம், இழப்பீடாக 56,000 பவுண்டுகள் அளிக்க துருக்கிய விமான சேவை நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.