நம் நாட்டிற்கு புதிய சகாப்தம்! பெரும்பான்மையை இழந்தும் மீண்டும் ஜனாதிபதியான சிறில் ரமபோசா
தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
30 ஆண்டுகளில்
கடந்த மே 29ஆம் திகதியில் தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை கைப்பற்றியது.
இதன்மூலம் 30 ஆண்டுகளில் முதல் முறையாக, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது.
மீண்டும் ஜனாதிபதி
இதனால் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தல் வாக்கெடுப்பில், 71 வயதாகும் சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) 283 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார்.
கூட்டணி குறித்து பேசிய அவர், ''புதிய பிறப்பு, நமது நாட்டிற்கு ஒரு புதிய சகாப்தம். தங்களது வேறுபாடுகளை களைந்து ஒன்றாக வேலை செய்ய வேண்டிய நேரம் இது. இதைத்தான் நாங்கள் செய்வோம், இதைத்தான் ஜனாதிபதியாக அடைய நான் கடமைப்பட்டுள்ளேன்'' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |