சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட பெண்... திடீரென கண் திறந்ததால் அதிர்ச்சி
செக் குடியரசில் உயிரிழந்ததாக சான்றளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட இருந்த ஒரு பெண், திடீரென கண் திறந்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உயிரிழந்ததாக சான்றளிக்கப்பட்ட பெண்
செக் குடியரசிலுள்ள Pilsen என்னுமிடத்தில் ஒரு முதிய தம்பதியர் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
சமீபத்தில் ஒரு நாள் காலையில் அந்த முதியவர் தனது மனைவியை எழுப்ப, அந்த 88 வயதுப்பெண் அசைவற்றுக் கிடந்துள்ளார்.
உடனடியாக அவர் அவசர உதவியை அழைக்க, துரதிர்ஷ்டவசமாக, வந்த விசாரணை அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை பரிசோதித்துவிட்டு, அவர் உயிரிழந்துவிட்டதாக சான்றளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை அடக்கம் செய்வதற்காக அவரது உடல் இறுதிச் சடங்கு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு மைய ஊழியர்கள் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக ஆயத்தப்படுத்தும் பணியில் இறங்க, சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட அந்தப் பெண்மணி கண் திறந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது அவர் நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக சான்றளித்த விசாரணை அதிகாரி மீதே விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |