அப்பா என்னை விட்டுப் போய்விடாதீர்கள் என கதறும் மகன்... காயமடைந்ததால் தன்னைக் கொன்றுவிடுமாறு கெஞ்சும் தந்தை: உயிர் துடிக்க வைக்கும் ஒரு காட்சி
மீண்டும் போரின் பயங்கரங்களை உலகம் காண அரங்கேற்றியுள்ளார் ரஷ்ய அதிபர் புடின்.
ரஷ்ய படைகள் பொதுமக்களைத் தாக்குவதில்லை என ரஷ்ய தரப்பு கூறிக்கொண்டிருக்க, பொதுமக்கள் எப்படி கொடூரமாக தாக்கப்படுகிறார்கள் என்பதைக் கண் முன்னே காட்டும் கொடூரக் காட்சி ஒன்று வெளியாகி உயிர் துடிக்கவைத்துள்ளது.
உக்ரைனியர் ஒருவர் தன் மனைவியையும் மகளையும் பாதுகாப்பாக இடத்துக்கு கொண்டு சேர்த்துவிட்டு, தங்கள் வீட்டிலிருந்த நாய்களை அழைத்துக்கொண்டு செல்வதற்காக தன் மகனுடன் மீண்டும் தனது வீட்டுக்கு காரில் சென்றுள்ளார்.
தந்தையும் மக்னுமாக கார் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருக்க, திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
அவர்கள் கார் மீது ரஷ்ய வீரர்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததாக கூறப்படுகிறது. அங்கு உக்ரைன் இராணுவம் இல்லை என்பதை ஊகடம் ஒன்று உறுதி செய்துள்ள நிலையில், தாக்கியவர்கள் ரஷ்ய இராணுவத்தினர்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள அந்த பயங்கர வீடியோவில், தந்தையும் மகனுமாக தங்கள் நாய்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது ரஷ்ய வீரர்கள் கார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்த, தன் தந்தையை காரை விட்டு இறங்கி, தரையில் படுத்துக்கொள்ளுமாறு கெஞ்சுகிறார் அந்த மகன்.
ஆனால், மகன் சொன்னபடியே தந்தை தரையில் படுத்துக்கொண்ட நிலையிலும், அவர் தாக்கப்பட்டுவிட்டார். அவரது கால்களில் ஒன்று முற்றிலும் சேதமாகிவிட்டது.
அப்பா என்னை விட்டு போய்விடாதீர்கள் என மகன் கதற, தந்தையோ, எனக்கு மோசமாக காயம் ஏற்பட்டுவிட்டது, என்னைக் கொன்றுவிடு என மகனிடம் கேட்கிறார். அவர் துடிக்க, அதைக் கண்டு மகன் கதற, அந்தக் காட்சியைக் காணும்போது நமது உயிர் துடிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆனாலும், காயங்கள் காரணமாக Oleh Bulavenko என்னும் அந்த தந்தை உயிரிழந்துவிட்டார்.
அத்துடன், எந்த செல்லப்பிராணிகளை மீட்பதற்காக அவர்கள் மீண்டும் தங்கள் வீட்டுக்குச் சென்றார்களோ, அந்த நாய்களில் இரண்டு தாக்குதலில் உயிரிழந்துவிட, ஒரு நாய் மட்டும் தன் எஜமான் உயிர் பிரியும் வரை அவர் அருகிலேயே உட்கார்ந்திருந்திருப்பதை அந்த வீடியோவில் காணலாம்.
கல் நெஞ்சையும் கலங்க வைக்கும் இந்த காட்சி போரின் பயங்கர விளைவுகளை கண் முன் காட்டியுள்ளது.
ரஷ்யா தாங்கள் பொதுமக்களைத் தாக்குவதில்லை என்றும், உக்ரைன்தான் தன் குடிமக்களை கேடயமாக பயன்படுத்துவதாகவும் கூறுவதெல்லாம் முற்றிலும் வடிகட்டிய பொய் என்பது இந்த வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது!