தினமும் 50 வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் பிரபல நாடு! சொன்ன காரணம்
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை தினமும் 50 பேர் என்ற எண்ணிக்கையில் குவைத் அரசு வெளியிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத்தில், கடந்த ஆண்டு மட்டும், 18,221 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறுகையில், குவைத்தில் தினமும் 50 பேர், மாதம் 1,518 பேர் வரை நாடு கடத்தப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் 11,177 ஆண்கள் மற்றும் 7,044 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், இவர்களில் பெரும்பாலானோர் காலாவதியான இருப்பிட சான்றிதழ்களை உபயோகித்து சட்டவிரோதமாக தங்கியிருப்பது தெரியவந்துள்ளதால், அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தற்கொலைக்கு முயன்றோர், ஊரடங்கு விதிகளை மீறியோரும் கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆர்பாட்டங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள், நாட்டின் பொதுநலன் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை கொண்டவர்களாக கருதப்பட்டவர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.