கோலி கடைசி வரை பெங்களூருக்கு விளையாடமாட்டார்! அவர் அடுத்த அணி இது தான்? டேல் ஸ்டைன் சொல்லும் காரணம்
ஐபிஎல் தொடர் கரியரை கோலி பெங்களூரு அணியுடன் முடித்து கொள்ள வாய்ப்பில்லை என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் கூறியுள்ளார்.
இந்திய அணியின் தலை சிறந்த வீரரான விராட் கோலியால், ஒரு கேப்டனாக சாதிக்க முடியவில்லை, இதன் காரணமாகவே அவர் டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்தும், இந்த ஐபிஎல் தொடருக்கு பின் பெங்களூருக்கு அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் வீரரும், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரருமான டேல் ஸ்டைன் கூறுகியில், கோலி சில விமர்சனங்கள் தன்னை நோக்கி வருவதற்கு முன்பே இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கலாம்.
அதே போன்று தான் அவர் இன்னும் சில ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனால், இதில் இருந்து விலகும் படி வலியுறுத்தல் வந்திருக்கலாம், இதை எல்லாம் மனதில் வைத்து தான் கோலி இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.
இங்கு ஒரு வீரர் எப்படிப்பட்ட பிளேயர் என்பது எல்லாம் பேச்சு கிடையாது, அப்பேர் பட்ட கெய்லையே தூக்கி போட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
அதே போன்று, டேவிட் பெக்காம் மான்செஸ்டார் யுனைடெட்-ல் இருந்து வெளியேறியிருக்கிறார். எனவே யாருக்கு வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
கோலி டெல்லியை சேர்ந்தவர். எனவே அந்தணி நிர்வாகம் உங்களது ஐபிஎல் கெரியரை எங்கள் அணியுடன் முடியுங்கள் என்று கேட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.