கிரிக்கெட் பயிற்சியாளராக மாறும் மகேந்திர சிங் டோனி? அடித்து கூறும் பிரபல வீரர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் பயிற்சியாளராக களமிறங்கி இளம் கிரிக்கெட் வீரர்களை வழிநடத்தி அவர்களுக்கு உதவி செய்யப் போகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தனிஷ் கணெரியா கூறியுள்ளார்.
டோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கு பிறகு ஐபிஎல் தொடரில் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
அவர் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தனிஷ் கணெரியா, பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுப்பார்கள்.
ஆனால் ஒரு சிலர் கிரிக்கெட் வீரர்கள் அப்படியே நேர்மாறாக பயிற்சியாளர் வேலையை மேற்கொள்வார்கள்.
அந்த வரிசையில் நிச்சயமாக டோனி இரண்டாவது ரகம். அவர் ஒரு போதும் வர்ணனையாளராக செயல்பட மாட்டார். டோனிக்கு இளம் வீரர்களை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்கிற அடிப்படைப் பண்பு தெரியும்.
சென்னை அணியில் பல இளம் வீரர்களை அவர் வழி நடத்தி அவர்களது கிரிக்கெட்டை மேம்படுத்தி இருக்கிறார். எனவே நிச்சயமாக டோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றவுடன், கிரிக்கெட் பயிற்சியாளராக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.
அவர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆக களமிறங்கி நிறைய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, அவர்களின் கிரிக்கெட் ஆட்டத்தை மேம்படுத்த போகிறார் என அடித்து கூறியுள்ளார்.