பிரபல பத்திரிக்கையாளர் சித்திகி மரணம்: மன்னிப்பு கோரிய தலிபான்
ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதலில் பிரபல பத்திரிக்கையாளர் சித்திகி மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதலை படம் பிடிப்பதற்காக இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி சென்றார்.
இந்நிலையில் கடந்த வியாழனன்று நடந்த தாக்குதலில் சித்திகி மரணமடைந்தார்.
இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்காக தலிபான் அமைப்பினர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித்,
மோதல் நடைபெற்ற பகுதியில் பத்திரிகையாளர் இருந்தது எங்களுக்குத் தெரியாது. இத்தகைய நிகழ்வுகளில் செய்தியாளர்கள் இருப்பதை எங்களுக்கு முறையாக தெரிவித்தால் மட்டுமே குறிப்பிட்ட இம்மாதிரியான சூழல்களில் அவர்களை பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.