இலங்கை கேப்டனுக்கு கொரோனா! சோகத்தில் ரசிகர்கள்
இலங்கை ஒரு நாள் அணி கேப்டன் தசுன் சானக்காவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
தசுன் சானக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சானக்க, ஜனவரி 16ம் திகதி தொடங்கவிருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.
ஜிம்பாப்வே தொடரை முன்னிட்டு இம்மாதம் 7ம் திகதி உடற் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது.
கொரோனா உறுதியான பிறகு, குறைந்தது இரண்டு வாரங்களுக்கு பிறகே உடற் தகுதி சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் தசுன் சானக்க விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.
எனினும், ஜிம்பாப்வே உடனான ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் சானக்க இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆனால், பிசியோதெரபிஸ்ட் மற்றும் டாக்டர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் தேர்வுக் குழு தான் இறுதி முடிவு எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தசுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அவர் ஜிம்பாப்வே ஒரு நாள் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோசகமடைந்துள்ளனர்.