PSL தொடரில் இருந்து விலகி IPL வரும் இலங்கை வீரர் - சாம் கர்ரனுக்கு மாற்று
2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது. தொடர் தொடங்கும் முன்னரே, ஏராளமான வீரர்கள் காயம் காரணமாக விலக உள்ளனர்.
காயத்தால் விலகிய சாம் கர்ரன்
2026 ஐபிஎல் தொடருக்காக, இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.2.40 கோடிக்கு வாங்கியது.

தற்போது காயம் காராணமாக, 2026 ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கர்ரன் விலகியுள்ளார்.
சாம் கரனுக்குப் பதிலாக, இலங்கை வீரர் தசுன் ஷனக்காவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்ய உள்ளது.
2025 நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் தசுன் ஷனக்காவை எந்த அணியும் வாங்கவில்லை.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெறும் PSL தொடருக்காக தனது பெயரை பதிவு செய்தார். இதில், லாகூர் கலந்தர்ஸ் அணி ரூ.75 லட்சத்திற்கு அவரை வாங்கியது.
தசுன் ஷனக்கா
PSL தொடரில் இருந்து விலகி அவர் RR அணியில் இணைவதன் மூலம், PSL தொடரிலிருந்து இந்த ஐபிஎல் தொடருக்கு வரும் 2வது வீரராக ஷனக்கா உள்ளார்.

முன்னதாக, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பிளெசிங் முசராபானியை(Blessing Muzarabani) PSL தொடரில் இருந்து விலகி KKR அணியின் முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு மாற்று வீரராக அணியில் இணைந்தார்.
முன்னதாக 2023, 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தசுன் ஷனக்கா விளையாடினார்.
இலங்கை அணித்தலைவராக உள்ள தசுன் ஷனக்கா, 2026 T20 உலக கிண்ணத்தில் ஓமனுக்கு எதிரான போட்டியில், 19 பந்துகளில் அரைசதம் அடித்து சர்வதேச T20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த அணித்தலைவர் என்ற ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |