பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து: 18 வயது இளைஞர் கைது
பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து
பிரித்தானியாவில் உள்ள லெஸ்டர்(Leicester) நகர மையப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக(de montfort University) மாணவர் ஒருவர் ஆக்ஸ்போர்டு தெருவில் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவசர சேவையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
பின்னர் அந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக உயிரிழந்தது தங்கள் மாணவர் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல்தாரிக்கு வலைவீச்சு
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவம் வீதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகத்திற்குரிய 18 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அத்துடன் சம்பவ நடந்த பகுதியில் உள்ள சிசிவிடி காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |