13 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்: தெரியவந்துள்ள திடுக் தகவல்
ரஷ்யாவில் அமைச்சராக இருந்த பெண்ணொருவர் உயிரிழந்துவிட்டதாக நம்பப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதும், உயிரிழந்துவிட்டதாக நாடகம் ஆடியதும் தற்போது தெரியவந்துள்ளது.
13 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்
ரஷ்யாவில் அமைச்சராக இருந்த மரியானா (Marianna Stupina) என்னும் பெண், 2012ஆம் ஆண்டு ஊழல் புகாரில் சிக்கினார்.

ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவானார் மரியானா.
தலைமறைவாக இருக்கும்போதே, காணாமல்போனவர்கள் பட்டியல் குறித்து ஒன்லைனில் தேடிய மரியானா, தன்னைப்போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தார்.

தன் கணவருக்கு தகவலனுப்பி, அந்த உடல் தான்தான் என பொய்யாக அடையாளம் கண்டு கூறுமாறு தன் கணவனுக்கு அவர் கூற, அவரும் உயிரிழந்தது தன் மனைவிதான் என நாடகமாடிவிட்டார்.
தெரியவந்துள்ள திடுக் தகவல்

அதிகாரிகள் மரியானா இறந்துவிட்டதாக நம்பிவிட, அவரோ அமைதியாக Astrakhan என்னும் நகருக்குத் திரும்பி அங்கு 13 ஆண்டுகள் வாழ்ந்துவந்துள்ளார்.
ஆனால், சமீபத்தில் மரியானா உயிருடன் இருப்பதை அறிந்துகொண்ட அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளார்கள்.

அவர் தற்போது தனது தண்டனைக்காலத்தை செலவிடுவதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் எப்படி சிக்கினார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |