வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொத்தாக மரணமடைந்த விவகாரம்... உக்ரேனிய மாலுமிக்கு தண்டனை
ஹங்கேரியில் மிக மோசமான படகு விபத்தை ஏற்படுத்திய உக்ரேனிய மாலுமிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய சுற்றுலா பயணிகள்
ஹங்கேரியில் கடந்த 2019ல் சுற்றுலா பயணிகளின் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 25 தென் கொரிய சுற்றுலா பயணிகள் மற்றும் இரண்டு ஊழியர்கள் Danube நதியில் மூழ்கி பலியாகினர்.
@reuters
அரை நூற்றாண்டுக்கும் மேலாக Danube நதியில் ஏற்பட்ட மிக மோசமான படகு விபத்து இதுவென கூறப்பட்டது. சுற்றுலா படகு ஒன்று 35 பேர்களுடன் விபத்தில் சிக்கியதுடன், நதியில் மூழ்கியது.
சம்பவத்தின் போது பலத்த மழையும் பெய்து வந்தது. இந்த விபத்தில் 27 பேர்கள் மரணமடைந்த நிலையில், இன்னும் ஒரு தென் கொரியரின் சடலம் மீட்கப்படவில்லை. இந்த விபத்தை ஏற்படுத்திய பயணிகள் கப்பல் மாலுமி, உக்ரேனியர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
பேரழிவின் நினைவுகளில்
நடந்த சம்பவத்திற்கு அவர் மன்னிப்பும் கோரியிருந்தார். இந்த நிலையில், மிக மோசமான படகு விபத்தை ஏற்படுத்திய அந்த மாலுமிக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
@reuters
தீர்ப்பினையடுத்து, இந்த பேரழிவின் நினைவுகளில் இருந்து என்னால் தப்ப முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், என்னால் தூங்க முடியவில்லை, எஞ்சிய எனது வாழ்க்கையை இவ்வாறு சிறையில் கழிப்பதே முறை எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் இருந்து 7 தென் கொரிய பயணிகள் மட்டுமே தப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |