சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒருபக்கம்... தேவாலயத்தில் கொடூர சம்பவம் மறுபக்கம்: கதிகலங்கிய ஆசிய நாடொன்று
பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஆராதனை நடத்தப்பட்ட பல்கலைக்கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பை பலப்படுத்திய ராணுவம்
இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டின் தெற்குப் பகுதியிலும் தலைநகர் மணிலாவைச் சுற்றிலும் காவல்துறையும் ராணுவமும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
@reuters
மராவியில் உள்ள பல்கலைக்கழக ஜிம்னாசியம் ஒன்றில் காலை கத்தோலிக்க மத வழிபாட்டின் போது வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 50 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
நாட்டின் தெற்கில் உள்ள மராவி நகரமானது 2017ல் ஐந்து மாதங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டது. வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள ஜனாதிபதி மார்கோஸ் ஜூனியர்,
வெளிநாட்டு சக்திகள்
அப்பாவிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகள் எப்போதும் நமது சமூகத்தின் எதிரிகளாகவே கருதப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார் . வெளிநாட்டு சக்திகள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறும் அதிகாரிகள், அது தொடர்பில் விளக்கமளிக்க மறுத்துள்ளனர்.
@reuters
இதனிடையே, மிண்டானாவ் மற்றும் தலைநகர் மணிலா பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகங்கள் அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டு, சோதனைச் சாவடிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மிண்டனாவ் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும், நகரில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் நில அதிர்வில் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உயிர் ஆபத்து ஏதும் பதிவாகவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |