அடுத்தது நீதான்... சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபலத்துக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்
இந்தியாவில் பிறந்த பிரபல பிரித்தானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ள பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு பிரபலத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பிரபலமான ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய JK ரௌலிங் (JK Rowling) என்னும் பிரித்தானிய எழுத்தாளருக்குத்தான் தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட விடயம் தன்னை வருத்தமடையச் செய்ததாக தெரிவித்திருந்த ரௌலிங், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
Image: PA
அதைத் தொடர்ந்துதான், கவலைப்படாதே, அடுத்தது நீதான் என ட்வீட் செய்துள்ளார் ஒருவர். அத்துடன், சல்மான் ருஷ்டியைத் தாக்கியவரை அந்த நபர் புகழ்ந்தும் இருக்கிறார் அந்த நபர்.
இந்த மிரட்டல் குறித்து ரௌலிங் பொலிசில் புகாரளித்துள்ள நிலையில், பலரும் அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.
.@TwitterSupport any chance of some support? pic.twitter.com/AoeCzmTKaU
— J.K. Rowling (@jk_rowling) August 13, 2022