குடியிருப்பு ஒன்றில் வீசிய துர்நாற்றம்: விசாரித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
குடியிருப்பினுள் முன்னெடுத்த சோதனையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
குடியிருப்பின் பின்னால் மேலும் ஐந்து சடலங்களை அந்த இளைஞர் அடையாளம் காட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அழுகிய நிலையில் 6 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் 21 வயதான இளைஞரை கைது செய்துள்ளதாகவும், அவர் மீது ஆறு கொலை வழக்குகள் பதியப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக அங்குள்ள மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், குறித்த குடியிருப்பினுள் முன்னெடுத்த சோதனையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
Image: SANDILE NDLOVU
மேலும், மாயமானதாக புகார் அளிக்கப்பட்டிருந்த பெண்ணின் அடையாளங்கள் ஒத்துப்போவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கடைசியாக அந்த பெண்ணை சந்தித்த நபர் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் 21 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த குடியிருப்பின் பின்னால் மேலும் ஐந்து சடலங்களை அந்த இளைஞர் பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் சிறப்பு அதிகாரிகள் குழு தீவிர விசாரணை முன்னெடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.