புதிய ஐபிஎல் அணியை வாங்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜோடி விருப்பம்! பிசிசிஐ-க்கு ரூ.7000 கோடி லாபம் என எதிர்பார்ப்பு
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜோடியான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் புதிய ஐபிஎல் அணிக்கான ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோன் முன்னாள் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன் ஆவார். ரன்வீர் ஆங்கில பிரீமியர் லீக்கில் ஈடுபட்டுள்ளார் மற்றும் தற்போது உலகின் மிகவும் பிரபலமான கூடைப்பந்து லீக்கான NBA-வின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் மற்றும் பாலிவுட் இடையே எப்போதும் நல்ல தொடர்பு உள்ளது. கொல்கத்தா அணியின் இணை உரிமையாளராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா உள்ளனர். அதேசமயம், ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பஞ்சாப் கிங்ஸில் பங்குகள் உள்ளன.
இரண்டு புதிய ஐபிஎல் அணிகளை வாங்கும் போட்டி மிகவும் சூடுபிடித்துள்ளது.
2 புதிய ஐபிஎல் அணியை ஏலம் எடுக்க மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்களான Glazer குடும்பம், அதாணி குழு மற்றும் ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுக்கள் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.
ஏலத்தின் முடிவு எதிர்வரும் அக்டோபர் 25ம் திகதி துபாயில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டு ஐபிஎல் அணிகளை விற்பதின் மூலம் பிசிசிஐ-க்கு ஒரு அணிக்கு தலா 3000-3500 கோடி வரை கிடைக்கும் என கூறப்படுகிறது.