மன்னராட்சியை அவமதித்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறை: பிரபல நாட்டின் நீதிமன்றம் உத்தரவு
தாய்லாந்தில் முடியாட்சியை அவமதித்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகள் சிறை தண்டனை
தாய்லாந்து நாட்டில் அரச முடியாட்சியை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லெஸ் மெஜஸ்ட் சட்டத்தின்(lese majeste law) கீழ் தாய்லாந்து நாட்டில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை இதுவாகும்.
EPA
3 வருடங்களுக்கு முன்பு முடியாட்சி குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட 32 வயதான மோங்கோல் திரகோட்-க்கு(Mongkol Thirakot) 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் கூடுதலாக 22 ஆண்டுகள் சிறை தண்டனையை அதிகப்படுத்தியுள்ளது.
இதனால் தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியை சேர்ந்த ஆன்லைன் ஆடை விற்பனையாளர் திரகோட் 50 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க உள்ளார்.
AP
தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிராக வெளிவரும் அனைத்து கருத்துக்களும் லெஸ் மெஜஸ்ட் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படுகிறது.
10 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு சிவில் தேர்தல் நடத்தப்பட்டு இருப்பினும், விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்த மெஜஸ்ட் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களுடன் நீரில் கவிழ்ந்த சுற்றுலா படகு: குஜராத்தில் 12 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |