ஜேர்மனியில் கொரோனா அதிகரித்துள்ளதால் கண்டிப்பாக இப்போது இதை செய்யக்கூடாது! அரசாங்கத்திற்கு நிபுணர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட தொற்று மாறுபாட்டின் பரவலால் தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்ததால், கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளை மேலும் தளர்த்துவதற்கு எதிராக ஜேர்மன் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தொற்றுகள் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே அதிக கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும் என்று Social Democrats-ன் சுகாதார நிபுணர் Karl Lauterbac கூறினார்.
சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஜேர்மனியில் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
தற்போதைய ஊரடங்கு மற்றும் தடுப்பூசிகளின் மெதுவான வநியோகத்தால் ஏற்பட்டுள்ள விரக்தியால் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான ஆதரவை பாதிக்கிறது.
மேலும் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் சம்பந்தப்பட்ட முகக் கவச கொள்முதல் ஊழலால் கன்சர்வேட்டிவ் கட்சி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.