பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு... மொத்த நகரமும் தப்பியது: 28 பேர் கைது
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 வெடிகுண்டுகளை செயலிழக்க செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு
இந்த விவகாரம் தொடர்பில் ஐ.எஸ் அமைப்பு தொடர்புடைய 28 தீவிரவாதிகளையும் கைது செய்துள்ளதாக ஈரான் நிர்வாகம் அறிவித்துள்ளது. கைதானவர்களில் சிலர் சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் செயல்படும் Takfiri குழுவை சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
@ap
ஈரானில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையது இந்த Takfiri குழு. மட்டுமின்றி, 2017ல் ஈரான் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய இரண்டு குண்டு வெடிப்புகளையும் இந்த குழு நிகழ்த்தியுள்ளது.
மிக சமீபத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். தற்போது முறியடிக்கப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து மொத்த நகரமும் தப்பியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |