சிவப்பு நிற காரை தேடி அலைந்த பொலிஸார்! டெல்லி குண்டு வெடிப்பில் திருப்பம்
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு தீவிரமாக தேடப்பட்டு வந்த சந்தேகத்திற்குரிய கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று (நவம்பர் 10) மாலை 6.52 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே, சுபாஷ் மார்க் சிக்னலில் ஒரு ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் கிட்டத்தட்ட 09 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பு சம்பவத்தின் போது காரில் 2 பேர் வரை இருந்ததாக கூறப்படும் நிலையில், காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் பரிதாபத்தில் கைது செய்யப்பட்ட மர்ம குழுவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர்களின் டைரி மற்றும் செல்போன்களை ஆய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்த கும்பலுக்கு பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட சிவப்பு நிற கார்
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சிவப்பு நிற ஈகோஸ்போர்ட்(EcoSport) காரை டெல்லி பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

DL10 CK 0458 என்ற பதிவு எண் கொண்ட இந்த சிவப்பு நிற கார் ஹரியானாவின் கண்டாவலி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நடவடிக்கையின் போது காரில் படுத்திருந்த இளைஞரை விசாரணைக்காக பொலிஸார் காவலில் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்படும் நபர் ஹூண்டாய் ஐ20 காருடன், மற்றொரு சிவப்பு நிற கார் ஒன்றையும் வைத்திருந்ததாக வெளியான தகவலுக்கு பிறகு இந்த உயர்மட்ட தேடுதல் வேட்டையானது தொடங்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |