ஐபிஎல் அணியால் அவமானப்படுத்தப்பட்ட நட்சத்தர வீரர் வார்னர்! அவருடன் ரகசிய டீல் பேசிய வேறு அணி
ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட டேவிட் வார்னரை வேறு அணி நிர்வாகம் தொடர்பு கொண்டு டீல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஐபிஎல் ஏலம் விரைவில் நடக்கவுள்ள நிலையில் தற்போது வரை எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில் டேவிட் வார்னர் பெயர் இடம்பெறவில்லை, ஏற்கனவே ஹைதராபாத் அணியால் இவர் அவமானங்களை சந்தித்தார் என கூறப்பட்டது.
இதனால், வார்னரை புதிய இரண்டு அணிகளில் ஒன்று தக்கவைக்கும் எனக் கருதப்பட்டது. அகமதாபாத் அணி வார்னரை வாங்கி, கேப்டனாக நியமிக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருதை வென்றப் பிறகு டெல்லி கேபிடன் அணி உரிமையாளர் கிரண் குமார், வார்னரை தொடர்புகொண்டு, ‘மீண்டும் டெல்லி அணிக்கு விளையாட வரவேண்டும்’ எனத் தெரிவித்ததாகவும், அதற்கு வார்னர் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டேவிட் வார்னர் 2009 முதல் 2014ஆம் ஆண்டுவரை டெல்லி அணிக்காக விளையாடிவர் என்பது நினைவுகூரத்தக்கது.