தொடங்கியது 4-வது அலை! டெல்டாவின் பிடியில் மத்திய கிழக்கு நாடுகள்! WHO எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸால் நான்காம் அலை தொடங்கியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவருகிறது. முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவேளை உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அடுத்தடுத்த அலை உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், டெல்டா வகை கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் நான்காம் அலை உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தீவிரமாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா வைரஸ் 22 மத்திய கிழக்கு நாடுகளில் குறைந்தது 15 நாடுகளுக்கு பரவியுள்ளது. மொரோக்கோ தொடங்கி பாகிஸ்தான் வரை பரவியுள்ளது.