ஓமிக்ரான் பரவலுக்கு மத்தியில் கொரோனா விதிகளை நீக்கிய பிரபல ஐரோப்பிய நாடு!
ஓமிக்ரான் பரவலுக்கு மத்தியில் ஐரோப்பிய நாடான டென்மார்க் நாடு பல கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது மற்றும் ஞாயிற்றுக்கிழமை சில பொது இடங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்ட திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன.
டென்மார்க்கில் உள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ள குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற இடங்களில் மக்கள் கட்டயமாக முகக் கவசம் அணிய வேண்டும்.
அதுமட்டுமின்றி பொது இடங்களில் நுழைய மக்கள் தடுப்பூசி போட்டதற்கான அல்லது கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவிவை ஆதாரமாக வழங்க வேண்டும்.
ஜனவரி 31 ஆம் திகதி டென்மார்க்கில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.