பிரித்தானியாவில் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு சொந்த நாடு திரும்பிய பிரபல ராணி குறித்து வெளியான முக்கிய தகவல்
பிரித்தானிய ராணி இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு சொந்தநாட்டுக்கு திரும்பிய டென்மார்க் ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு கடந்த 19-ந் திகதி லண்டனில் நடந்தது. இதில் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெட் (82) நேரில் கலந்து கொண்டு, ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது. 50 ஆண்டு காலம் ராணியாக உள்ள அவர் நேற்று முன்தினம் இரவு முதல் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
(John Sibley/Pool via AP, File) (AP)
ஏற்கனவே அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கி மீண்டு வந்தார். அவர் 3 'டோஸ்' தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ள நிலையில் இப்போது கொரோனா தாக்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், Fredensborg அரண்மனையில் ராணி தங்கியுள்ள நிலையில் தொற்றிலிருந்து குணமடைந்து வருகிறார்.
அவரது மகனும் வாரிசுமான இளவரசர் ஃபிரடெரிக் மற்றும் அவரது மனைவி மேரி ஆகியோர் ராணி சார்பாக அரசாங்க உறுப்பினர்கள், டேனிஷ் நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.