பெண் உடை உடுத்தியதற்காக நாடு கடத்தப்பட இருக்கும் அழகி
பெண் உடை உடுத்தியதற்காக ஒரு அழகி நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருக்கிறார்.
அதற்குக் காரணம் Nur Sajat (35) என்ற அந்த அழகி ஒரு திருநங்கை!
ஒரு திருநங்கை, பெண் உடை உடுத்தியதற்காக தண்டிக்கப்பட இருக்கிறாரா என்று பார்த்தால், அவர் மலேசியாவில் ஒரு மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தினாராம். மலேசியாவில், திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாம்.
ஆகவே, Nur மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
ஆனால், அவர் தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை மலேசியாவுக்கு நாடுகடத்துமாறு அதிகாரிகள் தாய்லாந்தை வற்புறுத்தி வருகிறார்கள். மலேசியாவில் அவர் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அதுவும் ஆண்கள் சிறையில்...
தனக்கு ஏராளம் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால் தான் மலேசியா செல்ல அஞ்சுவதாகவும் தன்னை சமூக ஊடகம் ஒன்றில் பின்தொடரும் 312,000 பேருக்கும் தெரிவித்துள்ளார் Nur.
அவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்படுவாரானால் மோசமாக நடத்தப்படுவார் என்றும் துஷ்பிரயோகம் செய்யப்படுவார் என்றும் கூறும் மனித உரிமை ஆர்வலர்கள், அவுஸ்திரேலியாவில் அவருக்கு புகலிடம் கோர ஆதரவு அளித்து வருகிறார்கள்.