கோயில் தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கிய பக்தர்
சுவாமிக்கு படைத்த கோயில் தேங்காயை பக்தர் ஒருவர் ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.
ஏலத்தில் வாங்கப்பட்ட தேங்காய்
கோவா மாநிலம், வடக்கு கோவா மாவட்டம், பெர்னெம் நகருக்கு அருகே இருக்கும் கோர்காவ் கிராமத்தில் ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் இரண்டு தினங்களுக்கு முன்பாக திருவிழா நடைபெற்றது. இந்த விழாவானது ஐந்து நாட்கள் நடைபெற்றது.
அப்போது திருவிழாவுக்கு பெர்னெம் நகரம் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பின்னர், சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய் ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர் அந்த தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.
அவர் இந்த தேங்காயை வீட்டில் வைத்து வழிபடுவார் என்று சொல்லப்படுகிறது. விழாவின் போது சுவாமிக்கு படைக்கப்படும் வாழைப்பழம், தற்பூசணி, அன்னாசி உள்ளிட்ட பழங்கள் ஏலத்தில் விடப்படும்.
இதில் திரட்டப்படும் நிதியானது கோயில் பணிகளுக்கும், சமுதாய சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என கோயில் நிர்வாகக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |