தோற்கும் அணியாவே இருந்தோம்! KKRக்கு தான் ஜெயிக்குற தகுதி... கோப்பையை CSK வென்றும் பெருந்தன்மையின் உச்சத்தில் டோனி
ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர் பேசிய சென்னை கேப்டன் டோனி கொல்கத்தா அணியை புகழ்ந்து பேசியுள்ளார்.
கொல்கத்தாவை ஐபிஎல் இறுதிப்போட்டியில் 27 ரன்களில் வீழ்த்தி 4ம் முறையாக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் கோப்பையை தட்டி தூக்கியது.
வெற்றிக்கு பின்னர் டோனி பேசுகையில், சிஎஸ்கேவை பற்றி பேச ஆரம்பிக்கும் முன்பாக நான் கொல்கத்தாவைப் பற்றி பேச விரும்புகிறேன். மீண்டெழுவது கடினம், அதுவும் கொல்கத்தா அணி ஆடிய விதம் மீண்டெழுந்து இறுதி வரை வந்த விதம் எதைக்காட்டுகிறது எனில் ஐபிஎல் கோப்பையை வெல்ல ஏதாவது அணிக்கு தகுதி இருக்கிறது என்றால் அது கொல்கத்தா அணிக்குத்தான், இந்த அணிக்கே அதிக தகுதி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
அந்த அணியின் பயிற்சியாளர்கள், உதவிப்பணியாளர்களுக்கே இந்த பெருமை போய் சேர வேண்டும், இடைவெளி அவர்களுக்கு நிச்சயம் உதவியுள்ளது. சிஎஸ்கேவைப் பொறுத்த வரையில் வீரர்களை மாற்ற வேண்டியிருந்தது.
மேட்ச் வின்னர்கள் ஒவ்வொரு ஆட்டமும் வந்து கொண்டே இருந்தனர், நன்றாக ஆடினர். புள்ளி விவரங்களை பார்த்தால் நாங்கள்தான் சீராக இறுதிப் போட்டியில் தோற்கும் அணியாக இருந்திருக்கிறோம்.
நாக் அவுட்டில் பலமாக திரும்ப வேண்டும். உள்ளபடியே கூற வேண்டுமெனில் நாங்கள் அதிகம் விவாதிப்பதெல்லாம் இல்லை.
எங்கள் பயிற்சி அமர்வுகள் பிரமாதமாக அமைந்தன.
சென்னையில் ஆடுவது போலவே உணர்ந்தேன், ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.