டோனி ஓய்வு பெற்ற பின்னர் அன்றைய இரவில் நடந்தது என்ன? பல ஆண்டு ரகசியத்தை உடைத்த அஸ்வின்
டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அன்றைய இரவில் என்ன செய்தார் என்பது குறித்த தகவலை அஸ்வின் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனாக விளங்கியவர் மகேந்திர சிங் டோனி. இவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 2019 ஆம் ஆண்டுவரை விளையாடி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2014-ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்தார்.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் திகதி திடீரென்று பாக்ஸிங் டே போட்டி முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4876 ரன்களை குவித்துள்ளார். அதில் ஆறு சதங்களும், 33 அரை சதங்களும் அடங்கும். இந்நிலையில் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அன்று இரவு அவர் என்ன செய்தார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னணி வீரரான அஷ்வின் தனது யூடியூப் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அஷ்வின் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்ற அந்த நாள் என்னுடைய ஞாபகத்தில் இன்றும் நன்றாக உள்ளது. 2014ஆம் ஆண்டு மெல்போர்ன் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க நானும் அவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தோம்.
ஆனாலும் இறுதியில் நாங்கள் அந்த போட்டியில் தோல்வி அடையவே அந்த ஸ்டம்புகளை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினார். மேலும் அன்று மாலை நான், ரெய்னா. இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் டோனியின் அறையில் இருந்தோம்.
அன்று இரவு முழுவதும் டோனி தான் அணிந்திருந்த ஜெர்சியையை கழட்டாமல் இருந்தார். அது மட்டுமின்றி அந்த ஜெர்சியின் மீது சில கண்ணீர் துளிகளும் அவர் சிந்தி இருந்தார் என அஷ்வின் தெரிவித்துள்ளார்.