டோனிய இவங்க தான் காப்பாத்துறாங்க! CSK-வின் நிலையை புட்டு புட்டு வைத்த முன்னாள் வீரர்
சென்னை அணியின் கேப்டன் ஆன, டோனியின் பேட்டிங் குறித்து மறைமுகமாக முன்னாள் வீரர் சஞ்சை மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை அணி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
கடந்த முறை முதல் ஆளாக லீக் சுற்றோடு வெளியேறிய சென்னை அணி இந்த முறை அற்புதமாக விளையாடி வருகிறது. கடந்த ஆண்டே டோனி, நாங்கள் மீண்டும் சிறப்பாக திரும்பி வருவோம் என்று கூறினார்,
அதே போன்று செய்தும் காட்டிவிட்டார். ஆனால், அவருடைய பேட்டிங் தான் இன்னும் கேள்விகுறியாகவே உள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், டோனியின் பேட்டிங் அந்தளவிற்கு இல்லை.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து கொடுத்தாலும், டோனி இன்னும் பழைய டோனியாக முடியவில்லை.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறுகையில், இந்த முறை, டோனியின் பேட்டிங் சரியாக இல்லை என்றாலும், அவருடைய கேப்டன்சி மிகவும் அற்புதமாக உள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சென்னை அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது, டோனியின் கேப்டன்சியும் நன்றாக உள்ளது, இது இரண்டுமே சென்னை அணியை காப்பாற்றி வருகிறது என்று டோனியின் பேட்டிங்கை மறைமுகமாக சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.